வாக்கு சாவடிகள் மீது "துப்பாக்கி சூடு".. வடகிழக்கு மாநிலத்தில் பரபரப்பு.!!
Firing on polling booths in Manipur
மணிப்பூர் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் வன்முறை வெடித்து வாக்குச்சாவடிகள் மீது துப்பாக்கி சூடு நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. குறிப்பாக அறம்பை தெங்கோல் பகுதியில் உள்ள ஒவ்வொரு வாக்குச்சாவடியையும் முழுமையாகக் கைப்பற்றிய மர்ம நபர்கள் மக்களை துப்பாக்கி முனையில் பொதுமக்களை வாக்களிக்க வைப்பதாக நம் மாநில ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.
அதேபோன்று மணிப்பூரில் உள்ள மொய்ராங் தொகுதிக்கு உட்பட்ட தமன்போக்பியில் உள்ள வாக்குச் சாவடி அருகே மர்ம நபர்கள் பல ரவுண்டுகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். எனினும் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்த துப்பாக்கிச் சூடு சம்பவமானது வாக்களிக்க வரிசையில் நின்ற வாக்காளர்களிடையே பீதியை ஏற்படுத்தியது.
துப்பாக்கிச் சூடு சத்தத்திற்கு மத்தியில் வாக்குச்சாவடியில் இருந்து மக்கள் வெளியே ஓடுவது போன்ற வீடியோ வைரலாகி வருகிறது. அதேபோன்று மணிப்பூர் மக்களவைத் தொகுதி மற்றும் அவுட்டர் மணிப்பூரின் இம்பால் பள்ளத்தாக்கில் வசிக்கும் பெரும்பான்மையான மெய்டீஸ் மற்றும் குகி-சோ பழங்குடி சமூகத்தினருக்கு இடையே கடந்த ஒரு வருடமாக இன வன்முறையால் மணிப்பூர் உலுக்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
Firing on polling booths in Manipur