ராஜஸ்தான் - மக்களவை சபாநாயகரின் உதவியாளர்கள் மீது தாக்குதல் - 5 பேர் கைது.! - Seithipunal
Seithipunal


ராஜஸ்தான் - மக்களவை சபாநாயகரின் உதவியாளர்கள் மீது தாக்குதல் - 5 பேர் கைது.!

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள கோட்டா மாவட்டத்தில் சக்தி நகர் என்ற பகுதியில் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவின் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தின் முன்பு ஓம் பிர்லாவின் தனி உதவியாளர்கள் ஜீவந்தர் ஜெயின், ராகவேந்திர சிங் உள்ளிட்டோர் பேசிக்கொண்டிருந்தனர். 

அப்போது, அந்தவழியாக இருசக்கர வாகனத்தில் வந்த ஐந்து பேர் கொண்ட கும்பல் உதவியாளர்கள் இருவரையும் சரமாரியாக தாக்கி விட்டு அவர்களிடம் இருந்து செல்போன்களை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

இதைப்பார்த்த பொதுமக்கள் சம்பவம் தொடர்பாக போலீசாருக்குத் தகவல் அளித்தனர். அதன் படி அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காயமடைந்த இரண்டு பேரையும் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்தப்பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளை ஆய்வு செய்ததில் தாக்குதலில் ஈடுபட்டவர்களை அடையாளம் கண்டனர்.

இதைத்தொடர்ந்து போலீசார் தாக்குதலில் ஈடுபட்ட ஐந்து பேரையும் நேற்று கைது செய்து, அவர்களிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட செல்போன்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், அவர்களிடம் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

five peoples arrested for attack om birlas assistant attack


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->