அரசு பேருந்து மீது கார் மோதி விபத்து - 5 பேர் பலி.! - Seithipunal
Seithipunal


ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று அதிகாலை நேரத்தில் அரசு பேருந்து மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில் காரில் பயணம் செய்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி பகுதியைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் தனது குழந்தைக்கு உடல்நலம் சரியில்லாததால் சிகிச்சை அளிப்பதற்காக வாடகை காரில் மருத்துவமனை சென்றுவிட்டு தங்கச்சி மடம் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

அப்போது, முன்னால் சென்ற அரசுப்பேருந்து திடீரென நின்றதால் கட்டுப்பாட்டை இழந்த கார், அரசு பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 பெண் குழந்தைகள் உட்பட 5 பேர் உயிரிழந்தனர்.

மேலும், இரண்டு பேர் படுகாயமடைந்தனர். இந்த விபத்துக் குறித்து அக்கம் பக்கத்தினர் போலீஸாருக்குத் தகவலளித்தனர். அந்தத் தகவலின் படி போலீசார் விரைந்து வந்து படுகாயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளனர். 

பின்னர் போலீசார் இந்த விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

five peoples died accident in ramanathapuram


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->