நடந்துச் சென்றவர் மீது ஆம்புலன்ஸ் மோதி விபத்து - 4 பேர் பலி.! - Seithipunal
Seithipunal


மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் உள்ள சியோனி மாவட்டத்தில் நடந்து சென்றவர் மீது ஆம்புலன்ஸ் மோதி கவிழ்ந்ததில் நான்கு பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

ஆந்திர மாநிலம் கர்னூலில் இருந்து அவரது சொந்த ஊரான பீகாரில் உள்ள மேற்கு சம்பாரனுக்கு உடல்நலம் சரியில்லாத அனிஷ் ஷா என்பவர் ஆம்புலன்ஸ் மூலம் சென்று கொண்டிருந்தார். அதில் அனிஷ் ஷாவின் உறவினர்கள் 6 பேர் மற்றும் இரண்டு ஓட்டுனர்கள் இருந்தனர்.

இந்த நிலையில் ஆம்புலன்ஸ் இன்று காலை சியோனி மாவட்டத்தில், ஜபல்பூர்-நாக்பூர் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக, அந்த பகுதியில் நடந்து சென்றவர் மீது மோதி, அங்கிருந்த கம்பத்தில் இடித்து கவிழ்ந்தது. இதில் ஆம்புலன்சில் பயணம் செய்த பிரதிமா ஷா, பிரின்ஸ் ஷா, முகேஷ் ஷா , சுனில் ஷா ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும் 5 பேர் படுகாயமடைந்தனர். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து காயமடைந்தவர்களை மீட்டு ஜபல்பூரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

four peoples died and five peoples injured for accident in madhya pradesh


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->