மணல் லாரி கவிழ்ந்து 4 பேர் பலி..!
four peoples died for accident in gujarat
குஜராத் மாநிலத்தில் உள்ள பனஸ்கந்தா மாவட்டத்திற்கு லாரி ஒன்று மணல் ஏற்றிக் கொண்டு சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக லாரி குறுகிய பாதை வழியாகச் செல்ல முயன்றபோது கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் சாலை அருகில் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த ஒரு குழந்தை உள்பட 3 பெண்கள் மீது மணல் லாரி சரிந்து விழுந்தது. இது தொடர்பாக அக்கம் பக்கத்தினர் போலீஸாருக்குத் தகவல் அளித்தனர்.
அதன் படி போலீசார் விரைந்து வந்து கிரேன் உதவியுடன் இரண்டு மணி நேர போராட்டத்திற்கு பின்னர் நசுங்கிய உடலை மீட்டனர். பின்னர் இறந்தவர்களின் உடலானது அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டது.
இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மணல் லாரி கவிழ்ந்து மூன்று பெண்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
------------------------
English Summary
four peoples died for accident in gujarat