புதிய ராணுவ தளபதியாக ஜெனரல் உபேந்திர திவேதி பதவி ஏற்பு! - Seithipunal
Seithipunal


இந்தியாவின் புதிய ராணுவ தளபதியாக ஜெனரல் உபேந்திர திவேதி பதவியேற்று உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய ராணுவத்தின் தளபதியாக மனோஜ் பாண்டேவின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவடைந்தது .இந்திய ராணுவத்தின் 29 வது ராணுவ தளபதியான ஜெனரல் மேனேஜ் பாண்டே கடந்த மே 22 ஆம் ஆண்டு பதவியேற்றார்.

மனோஜ் பாண்டி பதவிக்காலம் இன்றுடன் நிறைவடைந்த நிலையில், தேசிய போர் நடைபெற்ற இடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். 26 மாத பதவி காலத்திற்குப் பிறகு இன்று அவர் ஓய்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், புதிய ராணுவ தளபதியாக  லெப்டினன்ட் ஜெனரல் உபேந்திரா திவேரி இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். ராணுவத்தின் துணை தளபதியாக பணியாற்றியவர். அடுத்து ராணுவ தளபதியாக நியமித்து கடந்த ஜூன் 12ஆம் தேதி மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது.

இந்த நிலையில் ராணுவ துணை தளபதியாக இருக்கும் லெப்டினன்ட் ஜெனரல் திவேதி. நாட்டின் 30வது ராணுவ தலைமை தளபதியாவார். இவர் பல்வேறு ராணுவ பொறுப்புகளில் பதவி வகித்தார் என்பது குறிப்பிடதக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

General Upendra Dwivedi accepted as the new army chief


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->