சுட்டெரிக்கும் வெயில் - அரசு அலுவலகங்கள் செயல்படும் நேரம் மாற்றம்.!!
government office working time change in odisa
ஒடிசா மாநிலத்தில் வெயில் காரணமாக அரசு அலுவலகங்கள் செயல்படும் நேரம் மற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் தற்போது கோடைகாலம் ஆரம்பமாகியுள்ளது. அதிலும் குறிப்பாக வட மாநிலங்களில் வெப்பம் வட்டி வதைக்கிறது. அந்த வகையில், ஒடிசா மாநிலத்தில், அதிலும் குறிப்பாக சம்பல்பூர் மாவட்டத்தில் கடந்த 6 மற்றும் 7-ம் தேதிகளில் 104 டிகிரி அளவுக்கு வெயில் சுட்டெரித்தது.

இதனால், சம்பல்பூர் மாவட்டத்தில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அந்த மாவட்ட நிர்வாகம் எடுத்து வருகிறது. இந்த நிலையில், அரசு அலுவலர்களின் நலனை கருத்தில் கொண்டு சம்பல்பூர் மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்கள் அனைத்தும் வரும் ஜூன் மாதம் 15-ம் தேதி வரை காலை 7 மணி முதல் மதியம் 1 மணி வரை உணவு இடைவேளையின்றி செயல்படும் என்று அந்த மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது. இந்த உத்தரவு நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
English Summary
government office working time change in odisa