தாலிகட்டும் சமயத்தில் கூலாக கேம் விளையாடிய இளைஞர் - வைரலாகும் புகைப்படம்.! - Seithipunal
Seithipunal


திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர். இந்த திருமண நிகழ்வில் நமது இந்திய நாட்டு கலாசாரத்தின்படி திருமணம் பந்தத்தில் இணையும் ஆணுக்கும், பெண்ணுக்கும் அவர்களின் வாழ்க்கையின் முக்கியமான தருணமாக தாலிகட்டும் நிகழ்வு கருதப்படுகிறது.

இந்த திருமணத்தின்போது ஒவ்வொரு ஆணும் மணமகளுடன் தன் இல்லற வாழ்வை பகிர்த்து கொள்ள தாலிகட்டும் நேரத்தை எதிர்பார்த்து காத்திருப்பது இயல்பு. ஆனால், மேற்கு வங்காளத்தில் தாலிகட்டும் நேரத்தில் செல்போனில் கேம் விளையாடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது, மேற்கு வங்க மாநிலத்தில் வாலிபர் ஒருவர் அலங்காரத்துடன் திருமணத்துக்கு தயாரான நிலையில் உட்கார்ந்திருக்கிறார். அவர் தாலி கட்டுவதற்கு மணமகளுக்காக காத்திருக்கும் சமயத்தில் செல்போனில் தன் நண்பர்களுடன் சேர்ந்து கேம் விளையாடியுள்ளார். 

இதுதொடர்பான காட்சி இணையத்தில் வெளியாகி ஒருசில நாட்களில் 4 லட்சம் பார்வைகளை கடந்துள்ளது. தாலிகட்டும் சமயத்தில் வாலிபர் ஒருவர் கேம் விளையாடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

groom play game with friends in marriage


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->