இந்தியா: கஞ்சா செடி வளர்க்க அனுமதி கொடுத்த முதலமைச்சர்! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளாக கஞ்சா புழக்கத்தால் பல குற்ற சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.

நாள்தோறும் சர்வ சாதாரணமாக கஞ்சா போதையில் ரகளை என்று செய்திகள் வருகின்றன. இதனை தடுக்க தமிழக காவல்துறை கடுமையாக போராடி வருகிறது.

இந்த நிலையில், கஞ்சா செடியை கட்டுப்பாடுகளுடன் வளர்க்க இமாச்சலப் பிரதேச அரசு அனுமதி வழங்கியுள்ளது. ஆனால், இந்த அனுமதி பொதுமக்களுக்குப் பொருந்தாது என்று அரசு தெளிவுபடுத்தியுள்ளது.

அதாவது, தொழில், அறிவியல் மற்றும் மருத்துவ ஆராய்ச்சி நோக்கங்களுக்காகக் கட்டுப்பாடுகளுடன் கஞ்சா செடியை வளர்க்க அனுமதி அளித்துள்ளது. 

தனிநபர்கள் கஞ்சா செடிகளை வளர்க்க முடியாது; குறிப்பிட்ட நிறுவனங்கள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள் மட்டுமே அரசாங்கத்தின் கடுமையான கட்டுப்பாடுகளின் கீழ் வளர்க்க முடியும்.

இமாச்சலப் பிரதேச முதலமைச்சர் சுக்விந்தர் சிங் சுகு தலைமையில் நடைபெற்ற  அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

 Himachal Pradesh cannabis Plant 


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->