குஜராத்தில் கோர விபத்து!...கண்டெய்னர் லாரி மீது கார் மோதி 7 பேர் உயிரிழந்த சோகம்! - Seithipunal
Seithipunal


தேசிய நெடுஞ்சாலையில் வேகமாக சென்ற கார், ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து முன்னே சென்ற கண்டெய்னர் லாரி மீது மோதியதில் 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் மாநிலத்தில் உள்ள ஷாம்லாஜியில் இருந்து அகமதாபாத்திற்கு கார் மூலம் 7 பேர் சென்று கொண்டிருந்துள்ளனர். தொடர்ந்து  சபர்கந்தா மாவட்டம், ஹிமத்நகர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் கார் வேகமாக சென்றதாக கூறப்படுகிறது. பின்னர் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த கார் முன்னே சென்ற கண்டெய்னர் லாரி மீது மோதியது.

இந்த கோர விபத்தில் காரில் பயணம் செய்த 7 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த விபத்தில் உயிழந்தவர்கள் யார் என்பது உள்ளிட்டவை குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Horrible accident in Gujarat 7 people died when a car collided with a container truck


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->