மத்திய பிரதேசத்தில் கோர விபத்து!...லாரி மோதியதில் 7 பேர் உயிரிழந்த சோகம்! - Seithipunal
Seithipunal


மத்திய பிரதேச மாநிலம், ஜபல்பூரில் உள்ள சிஹோரா-மஜ்காவன் சாலையில் ஆட்டோ ஒன்று சென்று கொண்டிருந்துள்ளது.  அப்போது, திடீரென லாரி ஒன்று ஆட்டோ மீது மோதி விபத்திற்குள்ளானது.

இந்த கோர சம்பவத்தில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 
மேலும்,  6 ஆண்கள் மற்றும் 4 பெண்கள் காயமடைந்த நிலையில், அவர்கள் மீட்கப்பட்டு சிஹோரா பகுதியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 

மேலும் இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த, சிஹோரா எம்.எல்.ஏ. சந்தோஷ் சிங் பத்கரே, போலீசார் மற்றும் அதிகாரிகளுடன் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டார். 

மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.5 ஆயிரம் வழங்கப்படும் என்றும், காயமடைந்தவர்ளுக்கு  ரூ.7,500 அளிக்கப்படும் என்று கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Horrible accident in Madhya Pradesh 7 people lost their lives in a lorry collision


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->