கேரளாவில் பரபரப்பு : மனைவியை கொன்று விட்டு தற்கொலை செய்துக் கொண்ட கணவர் - நடந்தது என்ன?  - Seithipunal
Seithipunal


கேரளாவில் பரபரப்பு : மனைவியை கொன்று விட்டு தற்கொலை செய்துக் கொண்ட கணவர் - நடந்தது என்ன? 

கேரள மாநிலத்தில் உள்ள காயங்குளம் பகுதியைச் சேர்ந்தவர்கள் பிஜூ-லவ்லி தம்பதியினர். இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இதில் தம்பதியினருக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்படுவதும், பின்பு சேர்ந்து கொள்வதும் வழக்கமாக இருந்துள்ளது.

இந்த நிலையில் வழக்கம் போல் நேற்று நள்ளிரவும் தம்பதியினருக்கு இடையே சண்டை வந்துள்ளது. அப்போது, திடீரென லவ்லியின் அலறல் சத்தம் கேட்டுள்ளது. இதைக்கேட்ட பிஜூவின் பெற்றோர்கள் ஓடிவந்தனர். அப்போது பிஜூ தன் கையில் கத்தியுடன் அவசரம் அவசரமாக வீட்டில் இருந்து வெளியேறினார்.

இதைப் பார்த்த பிஜூவின் பெற்றோர் அதிர்ச்சியடைந்து லவ்லி இருந்த அறைக்கு சென்று பார்த்தனர். அங்கு லவ்லி கத்திக்குத்துபட்டு வலியால் துடித்துக் கொண்டு இருந்தார். இதையடுத்து பிஜூவின் பெற்றோர், மருமகள் லவ்லியை மீட்டு, சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு லவ்லியை பரிசோதனை மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனர். இதற்கிடையே வீட்டை விட்டு அவசர அவசரமாகச் சென்று பிஜூ வீடு திரும்பவில்லை.

இதையறிந்த அவரது பெற்றோர்கள் தங்கள் மகன் போலீஸாருக்கு பயந்து தப்பி ஓடிவிட்டதாக நினைத்துள்ளனர். ஆனால் பிஜூ இன்று காலை அவரது வீட்டிற்கு அருகில் உள்ள ரயில்வே தண்டவாளத்தில் பிணமாக கிடந்துள்ளார். 

இது தொடர்பாக போலீசார் விசாரணை செய்ததில், பிஜு மனைவியைக் கொலை செய்துவிட்டு என்ன செய்வது என்றுத் தெரியாமல் மன வருத்தத்திலேயே ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

husband sucide after kill wife in kerala


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->