ஹைதராபாத் விரைவு ரயிலில் திடீர் தீ விபத்து! போலீசார் விசாரணை.!
Hyderabad express train fire accident
ஹைதராபாத், செகந்திராபாத் ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விரைவு ரயில் 2 காலி பெட்டிகளில் திடீரென இன்று தீப்பிடித்து எரிந்தது.
இந்த தீ விபத்தில் யாருக்கும் எந்த ஒரு சேதமும் ஏற்படவில்லை என தீயணைப்பு நிலைய அதிகாரி தெரிவித்துள்ளார். மேலும் இதுகுறித்து அவர் தெரிவித்திருப்பதாவது,
இன்று காலை 10:50 மணி அளவில் செகந்திராபாத் ரயில் நிலையத்தில் வைக்க நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஹைதராபாத் விரைவு ரயில் உள்ள பெட்டிகளில் திடீரென தீப்பற்றி எரிய தொடங்கியது.
இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை முழுமையாக அணைத்தனர். இந்த சம்பவத்தில் யாருக்கும் எந்த ஒரு சேதமும் ஏற்படவில்லை.
இந்த விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நின்று கொண்டிருந்த விரைவு ரயில் திடீரென தீப்பிடித்து எறிந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
English Summary
Hyderabad express train fire accident