சிம்பொனிக்காக வாழ்த்து பெற்ற இசைஞானி...! - பிரதமர் மோடியிடம் நேரில் சென்று வாழ்த்து பெற்ற இளையராஜா
Ilayaraja visited Prime Minister Modi and received congratulations for symphony
கடந்த 1976-ம் ஆண்டு தேவராஜ்-மோகன் இயக்கத்தில் வெளியான 'அன்னக்கிளி' படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் இசைஞானி இளையராஜா. இவர் இதுவரை தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், ஆங்கிலம் உட்பட பல்வேறு மொழிகளில் 1000 ற்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

சமீபத்தில் இவரது இசையில் வெளியான ''விடுதலை 2' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.மேலும் இவர் கடந்த மார்ச் 8-ந் தேதி லண்டனில் 'வேலியண்ட்' (Valiant) சிம்பொனியை அரங்கேற்றம் செய்தார். இதன்மூலம், முழு அளவிலான மேற்கத்திய சிம்பொனி இசையை அரங்கேற்றம் செய்த முதல் இந்தியர் என்ற சாதனையை இளையராஜா படைத்தார்.
இந்தியாவிற்கே பெருமை பெற்றுத்தந்த இளையராஜாவுக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் வாழ்த்துகள் குவிந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில்,முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இளையராஜாவுக்கு தமிழக அரசு சார்பில் பாராட்டு விழா நடத்தவுள்ளதாக அறிவித்துள்ளார்.
இதற்கிடையே இன்று இசையமைப்பாளர் இளையராஜா பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார். மேலும் அவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்.
இளையராஜா:
அதில் அவர் கூறியதாவது,"பிரதமர் மோடி உடனான சந்திப்பு, எனக்கு மறக்க முடியாத நிகழ்வாக அமைந்துள்ளது. எனது சிம்பொனி வேலியண்ட் உட்பட பல விஷயங்களைப் பற்றி நாங்கள் பேசினோம். அவரது பாராட்டு மற்றும் ஆதரவால் பணிவுகொள்கிறேன்"எனப் பதிவிட்டுள்ளார்.மேலும் இது தற்போது சமூக வலைத்தளங்களில் ரசிகர்களால் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.
English Summary
Ilayaraja visited Prime Minister Modi and received congratulations for symphony