முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டம் – 1.47 கோடி பயனாளிகள் பயன்!
CM Insurance data 2025
தமிழக சட்டப்பேரவையில் மருத்துவத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டம் குறித்து விளக்கினார்.
அதிமுக உறுப்பினர் பொன்ஜெயசீலன், கூடலூர் தொகுதியில் சில பயனாளிகள் காப்பீட்டு பலன்கள் பெறுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார். அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.
அதற்கு பதிலளித்த மா. சுப்பிரமணியன்,
✔ 1.47 கோடி பேர் இதுவரை இந்த மருத்துவக் காப்பீட்டில் பயனடைந்துள்ளனர்.
✔ குடும்ப ஆண்டு வருமான உச்ச வரம்பு ₹72,000-ல் இருந்து ₹1,20,000 ஆக உயர்த்தப்பட்டது.
✔ காப்பீட்டு தொகை ₹2 லட்சத்திலிருந்து ₹5 லட்சமாக உயர்த்தப்பட்டது.
✔ சிகிச்சை முறைகள் 1,450-ல் இருந்து 2,050 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளன.
✔ அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகள் 970-ல் இருந்து 2,175 ஆக உயர்த்தப்பட்டுள்ளன.
✔ தாமதம் ஏற்பட்ட பயனாளிகள் விவரங்களை வழங்கினால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.
கவுரவ விரிவுரையாளர்களின் ஊதியம்
அரசு கல்லூரி கவுரவ விரிவுரையாளர்களுக்கு வெறும் ₹25,000 தொகுப்பூதியம் வழங்கப்படுகிறது என்று பொன்ஜெயசீலன் கூறினார். யுஜிசி விதிமுறைப்படி ₹57,100 வழங்கப்படவேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
அதற்கு உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன்,
✔ அதிமுக ஆட்சியில் ₹15,000 ஊதியம் ₹20,000 ஆக உயர்த்தப்பட்டது
✔ திமுக ஆட்சியில் அதனை ₹25,000 ஆக அதிகரித்தோம் என விளக்கம் அளித்தார்.