அதிர்ச்சியில் டெல்லி; 500 ரூ. பணத்திற்காக இளைஞரை கொலை செய்துள்ள சிறுவர்கள்..!I
In Delhi the boys who killed the youth for Rs 500
டெல்லியின் நியூ உஸ்மான்பூர் பகுதியில் உள்ள பூங்காவில் நேற்று மாலை இளைஞர் ஒருவர் கத்தியால் குத்தப்பட்ட நிலையில், ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார். இது குறித்து அப்பகுதி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டதை அடுத்து,விரைந்து வந்த போலீசார் அந்த இளைஞரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
ஆனால், குறித்த இளைஞரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக அறிவித்துள்ளனர். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அதனை, தொடர்ந்து, போலீசார் சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் விசாரணை தொடங்கினர். விசாரணையில் கொல்லப்பட்ட இளைஞர் 20 வயதுடைய தில்ஷித் என்பது தெரியவந்துள்ளது.
தில்ஷித் இடமிருந்து 500 ரூபாய் பணத்தை திருட இரு சிறுவர்கள் உள்பட 03 பேர் முயற்சித்துள்ளனர். அப்போது ஏற்பட்ட மோதலில் தில்ஷித்தை 03 பேரும் கத்தியால் குத்திக்கொன்றுள்ளனர். இதையடுத்து தில்ஷித்தை கொலை செய்த சிறுவர்கள் உள்பட 03 பேரை போலீசார் கைது செய்தனர்.
English Summary
In Delhi the boys who killed the youth for Rs 500