'ஸ்பேடெக்ஸ்' திட்டம் வெற்றி - இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து! - Seithipunal
Seithipunal


கடந்த டிசம்பர் 30ம் தேதி அன்று இஸ்ரோ ஸ்பேடேக்ஸ் ஏ, ஸ்பேடெக்ஸ் பி ஆகிய 2 விண்கலன்களும் பிஎஸ்எல்வி சி-60 ராக்கெட் மூலம் ஏவப்பட்டு விண்ணில் நிலைநிறுத்தப்பட்டன.

இந்த நிலையில், இந்த இரு 2 விண்கலன்களை இணைக்கும் 'ஸ்பேடெக்ஸ்' திட்டம் வெற்றி பெற்றதாக இஸ்ரோ தற்போது அறிவித்துள்ளது.

இதன் மூலம் விண்வெளியில் 2 விண்கலன்களை இணைக்கும் ஒருங்கிணைப்பு தொழில்நுட்பத்தை செயல்படுத்திய உலகின் 4 நாடு என்ற பெருமையை இந்தியா தற்போது பெற்றுள்ளது.

ஸ்பேடெக்ஸ் திட்டத்தின் வெற்றிக்கு உழைத்த இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி தனது வாழ்த்தினை தெரிவித்துள்ளார்.

அதில், "செயற்கைக்கோள்களை விண்வெளியில் இணைக்கும் பணியை வெற்றிகரமாக நிரூபித்ததற்காக இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கும், ஒட்டுமொத்த விண்வெளி சகோதரத்துவத்திற்கும் வாழ்த்துக்கள். 

இது வரும் ஆண்டுகளில் இந்தியாவின் லட்சிய விண்வெளி பயணங்களுக்கு ஒரு குறிப்பிடத்தக்க படியாகும்" என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

ISRO scientists PM Modi 


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->