பிரதமரின் பிரசாரம் விஷம் நிறைந்தது: ஜெய்ராம் ரமேஷ் சாடல்.!
Jairam Ramesh says Modi campaign with poison
காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளரும் தகவல் தொடர்பு பொறுப்பாளருமான ஜெய்ராம் ரமேஷ் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் பேசி இருப்பதாவது,
முதற்கட்ட தேர்தலில் பா.ஜ.க மிகவும் மோசமாக செயல்பட்டது. இரண்டாம் கட்ட தேர்தலிலும் பா.ஜ.க சிறப்பாக செயல்படும் என்ற நம்பிக்கை கிடையாது.
பா.ஜ.க மொத்தத்தில் பெரும்பான்மையை பெறப்போவதில்லை. இந்தியா கூட்டணி தெளிவான மற்றும் உறுதியான பெரும்பான்மை பெறப் போகிறது.
பிரதமர் நரேந்திர மோடியின் பிரசாரம் இப்போது விஷத்தால் நிறைந்துள்ளது. அவர் பேசும் மொழி அவரது கொந்தளிப்பை வெளிப்படுத்துகிறது.
பிட்ரோடா சொல்வது அவரது சொந்த கருத்துக்கள் தான். இந்திய தேசிய காங்கிரஸின் கருத்துக்கள் கிடையாது என தெரிவித்துள்ளார்.
English Summary
Jairam Ramesh says Modi campaign with poison