கேரளாவில் மிக கனமழை... ''ஆரஞ்சு அலர்ட்'' - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இன்று, 5 மற்றும் 6 ஆம் தேதி ஆகிய 3 நாட்கள் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 

தமிழகத்தில் இன்று 17 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 

அதன்படி நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருச்சி, வேலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

இதே போல் கேரளா, எர்ணாகுளம் மாவட்டத்தில் இன்று மிக கனமழைகான 'ஆரஞ்சு எச்சரிக்கை'யை விடுத்தும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 

மேலும் வயநாடு, இடுக்கி, ஆலப்புழா உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கனமழைக்கான 'மஞ்சள் எச்சரிக்கை'யை விடுத்தும் இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kerala very heavy rain orange alert


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->