புதுச்சேரியில் பள்ளிகளுக்கு விடுமுறை - காரணம் என்ன? - Seithipunal
Seithipunal


மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

அதன் படி புதுச்சேரியில் நேற்று இரவு முதல் இடி-மின்னலுடன் கனமழை பெய்யத்தொடங்கியது. இந்த மழை காரணமாக புதுவை நகரின் பிரதான சாலைகளான அஜந்தா சந்திப்பு, அண்ணா சாலை, ராஜா தியேட்டர் சந்திப்பு, நேரு வீதி, காந்தி வீதி, புஸ்சி வீதி, காமராஜர் சாலை உள்பட நகர் முழுவதும் பள்ளமான இடங்களில் மழைநீர் தேங்கி குட்டை போல் காட்சியளித்தது. 

இந்த நிலையில் கனமழை எதிரொலியாக புதுச்சேரியில் இன்று அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சிறப்பு வகுப்புகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. முன்னதாக கோடைகாலத்தில் வெயிலின் தாக்கத்தால் கூடுதல் விடுமுறை விடப்பட்டதை ஈடுகட்டும் வகையில் சனிக்கிழமைகளில் வேலைநாளாக அரசு அறிவித்து இருந்தது. 

அதன்படி இன்று பள்ளிகள் செயல்படுவதாக இருந்தது. ஆனால் பலத்த மழை பெய்ததை முன்னிட்டு அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக கல்வி துறை சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

leave to school in puthuchery due to rain


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->