மகாராஷ்டிரத்தில், மத்திய அமைச்சரின் மகளிடம் அத்துமீறிய இளைஞர்கள்!
Maharastra Central Minister Daughter Case
மகாராஷ்டிரத்தில் மத்திய அமைச்சரின் மகளிடம் தவறான நடவடிக்கையில் ஈடுபட்டதாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலம், முக்தை நகரில் மகா சிவராத்திரி விழைவில் கலந்துகொண்ட மத்திய இணை அமைச்சர் ரக்ஷா காட்சேவின் மகளுடன் சில சிறுமிகள் கலந்து கொண்டனர்.
அப்போது, அங்கு இருந்த சில இளைஞர்கள், மத்திய அமைச்சரின் மகள் உட்பட அவரின் தோழிகளை அவதூறாக பேசி, மொபைல் மூலம் புகைப்படம் எடுக்க முயன்றதாக கூறப்படுகிறது.
இச்சம்பவம் குறித்து ரக்ஷா காட்சே நேரில் காவல்நிலையத்துக்கு சென்று புகார் அளித்தார். மேலும், நான் மத்திய அமைச்சராகவோ, எம்.பி.யாகவோ இங்கு வரவில்லை. என் மக்களின் தாயக நீதி கோரி வந்துள்ளேன். இது போன்ற செயல்களுக்கு முறையான நடவடிக்கை எடுக்க முதல்வரை நேரில் சந்தித்து வலியுறுத்துவேன் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் தரப்பில், போக்ஸோ சட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து. விசாரணையின் அடிப்படையில், அனிகேத் என்ற நபர் கைது செய்யப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், போலீசாரின் விசாரணையில், அவர் மீது ஏற்கெனவே இரண்டு முதல் நான்கு வழக்குகள் இருப்பதும், சம்பவத்தில் தொடர்புடைய மற்ற 6 பேரை தீவிரமாக தேடி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
English Summary
Maharastra Central Minister Daughter Case