அதிகரிக்கும் பயங்கரவாதிகளின் நடமாட்டம்...மேலும் 3 பேர் என்கவுண்டரில் சுட்டுக்கொலை! - Seithipunal
Seithipunal


ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதிகள் ஊடுருவ வாய்ப்புள்ளதாக புலனாய்வுத்துறை மூலம் கிடைத்த தகவல் அடிப்படையில், பாதுகாப்புப்படை வீரர்கள் ஜம்மு-காஷ்மீர் மாநில போலீசார் உடன் இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

நேற்று நள்ளிரவு முதல் இன்று காலை வரை தேடுதல் வேட்டை நடைபெற்ற நிலையில், குப்வாரா மாவட்டத்தில் உள்ள  மச்சல் பகுதியில், சந்கேத்திற்குரிய நபர்கள் நடமாட்டம் இருப்பதை கண்டறிந்தனர். அப்போது இரு தரப்பினருக்கும் இடையே கடும்  துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. இந்த துப்பாக்கி சூட்டில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டு வீழ்த்தப்பட்டனர்.

இதேபோல் குப்வாரா மாவட்டத்தில் உள்ள  டங்தாரில் நடைபெற்ற பாதுகாப்புப்படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையேயான சண்டையில் ஒரு பயங்கரவாதி சுட்டு வீழ்த்தப்பட்டார்.தொடர்ந்து ரஜோரி மாவட்டத்தில் உள்ள லத்தியில் பாதுகாப்புப்படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ள நிலையில், இதுவரை  மூன்று என்கவுண்டரிலும் 3 பயங்கரவாதிகள் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளனர்.

மேலும்  ஜம்மு-காஷ்மீரில் கடந்த சில வாரங்களாக பயங்கரவாதிகளின் நடமாட்டம் அதிகமாகியுள்ள நிலையில், அவர்களை தேடும் பணியில் பாதுகாப்புப்படையினர் ஜம்மு-காஷ்மீர் போலீசாருடன் இணைந்து தேடி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Movement of terrorists increasing 3 more killed in encounter


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->