பெருக்கெடுத்து ஓடும் மழை! மும்பைக்கு ரெட் அலர்ட்! பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை! - Seithipunal
Seithipunal


மகாராஷ்டிரா மாநிலத்தில் வெளுத்து வாங்கி வரும் கனமழை காரணமாக, மும்பை மாநகருக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. 

கடந்த சில தினங்களாகவே மகாராஷ்டிரா மாநிலத்தின் மும்பை மற்றும் மும்பையின் புறநகர் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

குறிப்பாக நேற்று இரவு பெய்த கனமழை காரணமாக நகரின் பல்வேறு பகுதிகளில் மழை நீர் தேங்கி ஆறு போல் ஓடிக்கொண்டிருக்கிறது.

மேலும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் சுரங்கப் பாதைகளில் தண்ணீர் தேங்கி போக்குவரத்து தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் மும்பை பகுதியை சுற்றி உள்ள அனைத்து ஏரிகளும் தொடர் மழை காரணமாக நிரம்பி வழிந்து கொண்டிருக்கின்றன. 

மேலும் சுமார் 60 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசியதால், பல இடங்களில் மரங்கள் விழுந்து உள்ளதாகவும், தண்டவாளங்களில் தண்ணீர் தேங்கி ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளதாகவும், சாலைகளில் மழை பெருக்கெடுத்து ஓடுவதால் கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், வெளுத்து வாங்கி வரும் கனமழை காரணமாக மும்பை மாநகருக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.  மகாராஷ்டிரா மாநிலத்தின் தானே, பால்கர், ராய்கார்ட் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Mumbai Red Alert Heavy Rain 25 july


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->