குஜராத் : நேருக்கு நேர் மோதிய பேருந்து மற்றும் கார் - ஒன்பது பேர் உயிரிழப்பு.! - Seithipunal
Seithipunal


குஜராத் மாநிலத்தில் உள்ள நவ்சாரி பகுதியில் ஆமதாபாத்-மும்பை நெடுஞ்சாலையில் எதிரெதிரே சொகுசு சென்று கொண்டிருந்த பேருந்து மற்றும் கார் திடீரென நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளானது. 

இந்த விபத்தில் கார் முற்றிலுமாகவும், பேருந்து முன்பக்கம் மட்டும் சேதமடைந்து உள்ளது. இதில், ஒன்பது பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். ஒருவர் மட்டும் பலத்தக் காயமடைந்துள்ளார். இந்த விபத்து நடந்தவுடன் அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். 

இந்த விபத்துக்கு குறித்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதுபற்றி நவ்சாரி மாவட்ட துணை போலீஸ் சூப்பிரெண்டு வி.என். பட்டேல் தெரிவித்ததாவது, "இந்த விபத்தில் பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதியதில், ஒன்பது பேர் பலியாகி உள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர். 

பலத்த காயமடைந்த நபர் சூரத் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். இந்த விபத்திற்கான காரணம் குறித்து எதுவும் தெரிய வரவில்லை. மேலும், இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

near gujarat bus and car accident nine peoples died


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->