நாடு முழுவதும் இளநிலை நீட் தேர்வுக்கு 20.87 லட்சம் மாணவர்கள் விண்ணப்பம்.! - Seithipunal
Seithipunal


எம்.பி.பி.எஸ்., பிடிஎஸ், சித்தா, ஆயுர்வேதா, ஓமியோபதி உள்ளிட்ட மருத்துவப்படிப்புகளில் சேருவதற்காக அகில இந்திய அளவில் ஒவ்வொரு ஆண்டும் தேசிய தகுதி தேர்வான நீட் தேர்வு நடத்தப்படுகிறது.

அதன்படி, மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான நடப்பு கல்வி ஆண்டுக்கான இளநிலை நீட் தேர்வு, நாடு முழுவதும் வருகிற மே மாதம் 7ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான விண்ணப்பப்பதிவு கடந்த மார்ச் 6-ம் தேதி தொடங்கியது. 

இதனையடுத்து விண்ணப்பிப்பதற்கு ஏப்ரல் 6ம் தேதியுடன் கால அவகாசம் முடிவடைந்தது. இதில் விண்ணப்பிக்க தவறிய மாணவர்கள் தங்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்குமாறு தேசிய தேர்வு முகமைக்கு கோரிக்கை விடுத்தனர். 

அதனைத் தொடர்ந்து மாணவர்கள், பெற்றோரின் கோரிக்கையை ஏற்று நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க ஏப்ரல் 13ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், சில மாணவர்களின் கோரிக்கையை ஏற்று விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பதற்காக ஏப்ரல் 15ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக தேசிய தேர்வு முகமை தெரிவித்தது.

இந்த நிலையில் நாடு முழுவதும் நீட் தேர்வு எழுத  இதுவரை இல்லாத வகையில் 20.87 லட்சம் மாணவ, மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர். இதில் ஆண்களை விட 2.80 பெண்கள் அதிகமாக விண்ணப்பித்துள்ளனர்.

இதில், அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 2.80 லட்சம் பேரும், உத்திரபிரதேசத்தில் 2.70 லட்சம் பேரும் விண்ணப்பித்துள்ளனர். மேலும் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

NEET UG 2023 exam 20.87 lakhs students apply


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->