நேபாளம் பேருந்து விபத்து! 41 பேர் உயிரிழப்பு! - பிரதமர் நரேந்திர மோடி நிவாரணம் அறிவிப்பு! - Seithipunal
Seithipunal


நேபாளத்தின் தனாஹுன் மாவட்டத்தில் சுற்றுப்பயணமாக சென்ற இந்தியர்கள் உள்பட 40 பேருடன் சென்ற பேருந்து ஒன்று நேற்று ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

நேற்று காலை 11.30 மணியளவில் இந்த பேருந்து பொக்ராவில் இருந்து காத்மண்டு நோக்கி சென்றுகொண்டிருந்தபோது மார்ஸ்யாங்டி ஆற்றில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.

இந்த தகவல் அறிந்த போலீசார் மற்றும் மீட்புக் குழுவினர் அங்கு விரைந்து சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். இந்த விபத்தில், 14 பேர் பலியாகினர் என முதல் கட்ட தகவல் வெளியானது. 

இதை தொடர்ந்து, மருத்துவமனையில் படுகாயங்களுடன்  சிகிச்சை பெற்று வந்த மேலும் 11 பேர் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தனர்.

விபத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 27 ஆக இருந்த நிலையில், பிறகு பலி எண்ணிக்கை 41 ஆக உயர்ந்தது.

இந்த நிலையில், பிரதமர் மோடி நேபாளம் விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு நிவாரணம் அறிவித்துள்ளார்.

பிரதமர் மோடி ஏற்கனவே ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த வெளியிட்ட பதிவில், " நேபாளத்தின் தனாஹுன் மாவட்டத்தில் நடந்த விபத்தில் இறந்த ஒவ்வொருவரின் உறவினர்களுக்கும் பிரதமர் நிவாரண நிதியில் இருந்து 2 லட்சம் ரூபாயும், படுகாயமடைந்தவர்களுக்கு ரூ. 50,000 வழங்கப்படும்" என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Nepal bus accident 41 people died Prime Minister Narendra Modi relief announcement


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->