மும்பை விமான நிலையம் - 9 கிலோ தங்கம் கடத்திய நபர் கைது.! - Seithipunal
Seithipunal


மும்பை விமான நிலையத்தில் ஒன்பது கிலோ தங்கம் மற்றும் தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை விமான நிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் தங்கம் கடத்தி வரப்படும் சம்பவங்கள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதனை தடுக்கும் வகையில் மும்பை விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்த நிலையில் துபாயில் இருந்து மும்பை விமான நிலையத்திற்கு வரும் விமானத்தில் பயணி ஒருவர் அதிகளவில் தங்கம் கடத்தி வருவதாக மும்பை விமான நிலைய சுங்க அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் படி சுங்கத்துறை அதிகாரிகள் துபாயில் இருந்து மும்பை வந்த விமானத்தில் வந்த பயணிகளிடம் தீவிர சோதனை நடத்தினர்.

அப்போது, பயணி ஒருவரின் நடவடிக்கையில் அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டதையடுத்து அதிகாரிகள் அந்த பயணியை தனி அறைக்கு அழைத்து சென்று, சோதனை நடத்தினர். அப்போது, அவரிடம் இருந்து 9 கிலோ எடைகொண்ட 10 தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது. 

இந்த தங்க கட்டிகளின் மதிப்பு ரூ.4 கோடியே 62 லட்சம் ஆகும். இதையடுத்து அதிகாரிகள் தங்கம் கடத்தி வந்த நபரிடம் விசாரணை மேற்கொண்டனர். அதில், அவர் ஐக்கிய அமீரகத்தை சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது. 

இதைத்தொடர்ந்து அதிகாரிகள் அந்த நபரை கைது செய்து அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால், விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

nine kilo grams gold seized in mumbai airport


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->