உ.பியில் சோகம் - ஒன்பதாம் வகுப்பு மாணவன் மாரடைப்பால் உயிரிழப்பு.! - Seithipunal
Seithipunal


உ.பியில் சோகம் - ஒன்பதாம் வகுப்பு மாணவன் மாரடைப்பால் உயிரிழப்பு.!

உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் உள்ள, லக்னோ அலிகஞ்சி பகுதியில் சிட்டி மாண்டிசோரி பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்த மாணவன் அதிஃப் சித்திக். 

இவர் இன்று பள்ளி வகுப்பறையில் படித்துக் கொண்டிருந்த போது திடீரென மயங்கி விழுந்தார். இதைப் பார்த்த ஆசிரியர், அவரைக் கொண்டு சென்று சிபிஆர் கொடுத்து பின்னர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். 

அங்கு மாணவனை பரிசோதனை செய்த மருத்துவர்கள் மாணவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இருப்பினும் சித்திக்கின் பெற்றோர்கள் தங்களது மகன் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகத் தெரிவித்தனர்.

ஆனால், காவல் துறையினர் இது தொடர்பாக எந்த வழக்கும் பதிவு செய்யவில்லை. ஒன்பதாம் வகுப்பு மாணவன் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

nineth class student died heart attack in uttar pradesh


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->