நடுவானில் விமான கதவை திறக்க முயன்ற போதை ஆசாமி..! - Seithipunal
Seithipunal


நடுவானில் விமானத்தின் அவசர கதவை திறக்க முயன்ற பயணியை அதிகாரிகள் கைது செய்தனர்.

டெல்லி விமான நிலையத்தில் இருந்து பயணிகளுடன் நேற்று இண்டிகோ விமானம் பெங்களூரு சென்று கொண்டிருந்தது. அப்பொழுது விமானத்தில் பயணம் செய்த 40 வயதுடைய நபர் காலை 7.56 மணி அளவில் விமானத்தின் அவசரக் கதவை திறக்க முயன்றுள்ளார். மேலும் அந்தப் பயணி குடிபோதையில் இத்தகைய செயலில் ஈடுபட்டுள்ளார்.

இதைப்பார்த்த விமான பணியாளர்கள், இது குறித்து கேப்டனிடம் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அவசர கதவை திறக்க முயன்ற பயணி எச்சரிக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து விமானம் பெங்களூரு வந்தடைந்ததும், குடிபோதையில் விமானத்தின் அவசரக் கதவை திறக்க முயன்ற பயணியை சி ஐ எஸ் எப் அதிகாரிகள் கைது செய்தனர். மேலும் இதுகுறித்து பயணியிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Passenger arrested for trying to open emergency door in plane


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->