''மனதின் குரல்''... மக்களுக்கு நன்றி - தேர்தல் ஆணையத்துக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி.! - Seithipunal
Seithipunal



பிரதமர் நரேந்திர மோடி மாதம் தோறும் இறுதி ஞாயிற்றுக்கிழமையில் 'மனதின் குரல்' என்னும் வானொலி நிகழ்ச்சியின் மூலமாக நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். மக்களவை தேர்தல் காரணமாக கடந்த மூன்று மாதங்களாக இந்த நிகழ்ச்சி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. 

இந்நிலையில் மோடி மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்று உள்ள நிலையில் மனதின் குரல் நிகழ்ச்சி மீண்டும் இன்று முதல் ஒளிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டது. 

அதன் அடிப்படையில் இன்று காலை 11 மணி அளவில் மனதின் குரல் நிகழ்ச்சியில் பேச வேண்டிய பிரதமராக நரேந்திர மோடி, நண்பர்களை கடந்த பிப்ரவரி மாதம் முதல் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் உங்களுடன் பேச வாய்ப்பு கிடைக்காமல் நான் தவித்தேன். 

தற்போது மனதின் குரல் நிகழ்ச்சி மூலம் நான் மீண்டும் குடும்ப உறுப்பினர்களான நாட்டு மக்கள் மத்தியில் வந்துள்ளேன் என தெரிவித்தார். மேலும் அவர், 2024 மக்களவை தேர்தலில் வெற்றி கரமாக நடத்திய தேர்தல் ஆணையத்திற்கு பாராட்டுக்கள் இந்திய அரசியலமைப்பு மீது ஜனநாயகத்தின் மீதும் மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கைக்கு நான் நன்றி. 

ஜார்கண்ட் மாநிலத்தில் பழங்குடியின சுதந்திரப் போராட்ட வீரர்களை போற்றும் வகையில் இன்று கொண்டாடும் ஹூல் நிவாஸ் என்று கொண்டாடப்படுவதை சுட்டிக்காட்டி பிரதமர் மோடி பேசினார். 

சமீபத்தில் நடந்து முடிந்த சர்வதேச யோகா தினம் குறித்தும் அடுத்த வருடம் நடக்க உள்ள பாரிஸ் ஒலிம்பிக் குறித்தும் பிரதமர் பேசினார். அவரது இன்றைய உரையில் டி20 கோப்பையில் இந்தியா அணியின் வெற்றி குறித்து பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PM Modi congratulations election commission


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->