குஜராத்தில் உப்பு தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சம் நிதி உதவி.! பிரதமர் மோடி அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


குஜராத்தில் உப்பு தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூபாய் 2 லட்சம் நிதிஉதவி வழங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

குஜராத் மாநிலம் மோர்பி மாவட்டத்திலுள்ள ஹல்வாட் தொழில்துறை பகுதிக்குள் அமைந்துள்ள சாகர் உப்பு தொழிற்சாலையில் ஏராளமான தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இன்று தொழிற்சாலையில் சாக்குமூட்டையில் உப்பு நிரப்பும் பணி நடந்து கொண்டிருக்கும் போது அங்கிருந்த சுவர் திடீரென்று இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில் 12 தொழிலாளர்கள் உயிரிழந்து உள்ளனர். மேலும் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கி இருக்கக்கூடிய மற்றவர்களை மீட்கும் முயற்சி தொடர்ந்து நடைபெற்று வருவதாக உள்ளூர் எம்எல்ஏ பிரிஜேஷ் மெர்ஜா தெரிவித்துள்ளார்.

இந்த விபத்து குறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், மோர்பியில் சுவர் இடிந்து விழுந்து ஏற்பட்ட விபத்து நெஞ்சை உருக்குகிறது. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையட்டும். உள்ளூர் அதிகாரிகள் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்து வருகின்றனர்.

மோர்பியில் ஏற்பட்ட சோகத்தால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு பிரதமர் நிவாரண நிதியிலிருந்து தலா 2 லட்சம் ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு ரூபாய் 50 ஆயிரம் வழங்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

PM Modi has announced relief to the families of the victims of the Gujarat salt factory


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->