மாஞ்சா நூலால் பறிபோன போலீசார் உயிர் - உ.பியில் சோகம்.! - Seithipunal
Seithipunal


உத்தரபிரதேசம் மாநிலத்தில் உள்ள அம்ரோஹா மாவட்டத்தை சேர்ந்தவர் ஷாருக் கான். போலீஸ் கான்ஸ்டபிளான இவர், இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது அப்பகுதியில் அறுந்து கிடந்த மாஞ்சால் நூல் ஒன்று, ஷாருக் கானின் கழுத்தில் சிக்கியது. 

இது அவரது கழுத்தை அறுத்ததில், ஷாரூக் கான் நிலைதடுமாறி கீழே விழுந்தார். உயிருக்கு போராடிக்கொண்டிருந்த அவரை பார்த்த அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். இருப்பினும், ஷாருக் கான் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே மாஞ்சா நூல் குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்ததாவது;- "சீனாவை சேர்ந்த மாஞ்சா நூலை சட்டவிரோதமாக சிலர் பயன்படுத்தி பட்டம் விடுகின்றனர். 

மாஞ்சா நூலால் இதுபோன்ற எதிர்பாராத விபத்துகள் ஏற்படுகின்றன. சீன மாஞ்சா நூலை ரகசியமாக விற்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்." என்றுத் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

police died for manja thread cut in uttar pradesh


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->