நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் முக்கிய புள்ளி கைது! " தேர்வு மாப்பியா சால்வர் கேங்யுடன் தொடர்பு "! - Seithipunal
Seithipunal


உத்தரபிரதேசம் : நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் நாடு முழுவதும் பரப்பரப்பை ஏற்படுத்திய நிலையில், அதற்கு மூளையாக செயல்பட்ட ரவி அத்ரியை உத்தரபிரதேசம் போலீசார் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் இதுவரை இல்லாத அளவிற்கு 67 மாணவர்கள் நீட் தேர்வின் முழு மதிப்பெண்ணான  720க்கு 720 எடுத்தனர். அரியானா மாநிலத்தில் ஒரே தேர்வு மையத்தில் தேர்வு எழுதிய 7 பேர் முதல் மதிப்பெண் எடுத்திருக்கும் சம்பவம் நீட் தேர்வில் குளறுபடி ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியது. தற்போது நீட் தேர்வு வினாத்தாள் கசிவு உண்மைதான் என்பது உறுதியாகி உள்ளது.

பீகார் மாநிலம் பாட்னாவில் நீட் தேர்வுக்கு முன்னதாக வினாத்தாள் கசிந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்து மாணவர்களையும் கூட்டாளிகளையும் கைது செய்தனர். போலீசார் அவர்களிடம் நடத்தி விசாரணையில் உத்தர பிரதேச மாநிலம் நொய்டாவை சேர்ந்த ரவி அத்ரி என்ற இளைஞருக்கு இதில் தொடர்பு இருப்பதாக தெரியவந்ததை அடுத்து அவனை நோய்டாவின் நீம்கா  கிராமத்தில் ரவி அத்ரியை உத்தர பிரதேசம் போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்த ஆண்டு நீட் வினாத்தாள் கசிவுக்கு ரவி அத்ரி மூளையாக செயல்பட்டதாக கூறப்படுகிறது. பல்வேறு மாநிலங்களில் வினாத்தாள் கசிவு சம்பவங்களிலும் இவருக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. " சால்வர் கேங் " என்ற நெட்வொர்க் மூலம் வினாத்தாள் மற்றும் அதற்கான விடையை சமூக ஊடகங்களில் பதவி ஏற்றுவது இவரது செயலாக இருந்துள்ளது. 

இது தொடர்பாக உத்தரபிரதேசம் போலீசார் கூறியதாவது, கடந்த 2007 ஆம் ஆண்டில் ரவி அத்ரியின் குடும்பதினர் அவரை மருத்துவ நுழைவு தேர்வுக்கு தயாராக ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவுக்கு அனுப்பி வைத்துள்ளது. ரவி அத்ரி கடந்த 2012 ஆம் ஆண்டு நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெற்று அரியானாவில் ரோத்தக் நகரில் உள்ள பிஜிஐ மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தார்.

ஆனால் நான்காம் ஆண்டு தேர்வை அவர் எழுதவில்லை. அதற்குள் தேர்வு மாப்பியா கும்பலுடன் அவருக்கு தொடர்பு ஏற்பட்டு மற்ற மாணவர்களின் பினாமியாக அமர்ந்து தேர்வு எழுத தொடங்கினார் என்று இவ்வாறு கூறியுள்ளனர். நீட் தேர்வு வினாக்கள் கசிவு சம்பவத்தில் மூளையாக செயல்பட்ட ரவி அத்ரி கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Ravi Adri arrested in NEET exam question paper leak case


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->