முப்படைகளின் தலைமைத் தளபதியாக ஓய்வு பெற்ற லெப்டினன்ட் ஜெனரல் அணில் சவுகான் நியமனம்!
retd Lt General Anil Chauhan appointed New Chief of Defence Staff
முப்படைகளின் தலைமைத் தளபதியாக ஓய்வு பெற்ற லெப்டினன்ட் ஜெனரல் அணில் சவுகானை நியமனம் செய்து பாதுகாப்புத்துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
முப்படைகளின் தலைமை தளபதியாக இருந்த பிபின் ராவத், தமிழகத்தின் நீலகிரியில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார். இதனை தொடர்ந்து முப்படை தளபதிகள் குழுவின் தலைவராக ராணுவ தளபதி எம்.எம். நரவானே நியமிக்கப்பட்டார்.
![](https://img.seithipunal.com/media/Anil Chauhan-4zj6v.jpeg)
பிபின் ராவத் மறைவையடுத்து அடுத்த இந்திய முப்படை தலைமைத் தளபதியாக யார் நியமிக்கப்படுவார் என்ற கேள்வி இருந்து வந்தது.
இந்நிலையில், முப்படைகளின் தலைமைத் தளபதியாக ஓய்வு பெற்ற லெப்டினன்ட் ஜெனரல் அணில் சவுகானை நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
நாட்டின் ராணுவ விவகாரத் துறை செயலாளராகவும் அனில் செளஹான் பொறுப்பு வகிப்பார் என்றும் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
![](https://img.seithipunal.com/media/New Chief of Defence Staff-4zj6v.jpeg)
ஜம்மு காஷ்மீர், வடகிழக்கு மாநிலங்களில் பதற்றமான சூழல்களில் திறம்பட பணியாற்றிய அனுபவம் கொண்ட அனில் செளஹான், இந்திய ராணுவத்தின் கிழக்கு பிரிவுக்கு தளபதியாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
retd Lt General Anil Chauhan appointed New Chief of Defence Staff