பெங்களூருவில் சீரியல் கில்லர்? தொடர் கத்திக்குத்து சம்பவங்கள்: காவல்துறை சொன்ன அதிர்ச்சி தகவல்!
Bangaluru Crime Police statement
பெங்களூருவில் இந்திரா நகரில் அடுத்தடுத்து நான்கு பேர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சீரியல் கில்லர் வலம் வருவதாக தகவல் பரவிய நிலையில், காவல்துறை விசாரணையில் உண்மை வெளியாகியுள்ளது.
காவல்துறை விசாரணையில், கத்திக்குத்து சம்பவங்களின் பின்னணியில் சீரியல் கில்லர் யாரும் இல்லை என்றும், ஒரு நபர் தான் இந்த சம்பவங்களில் ஈடுபட்டதும் தெரியவந்துள்ளது.
குற்றவாளி மதுபோதையில் தனது குடும்பத்தினருடன் வாக்குவாதம் செய்ததாகவும், கோபத்தில் நான்கு பேரை கத்தியால் குத்தியதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும், அவர் மீது ஏற்கனவே சிறு திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் போலீசார் கூறியுள்ளனர்.
கத்திக்குத்து சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களின் உடல்நிலை தற்போது ஆபத்தை கடந்துள்ளது. இந்த சம்பவங்கள் குறித்து இந்திராநகர் காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.
English Summary
Bangaluru Crime Police statement