பள்ளிகளில் முட்டை வழங்குவதற்கான நிதி நிறுத்தம் - எந்த மாநிலத்தில் தெரியுமா? - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் மாணவர்களுக்கு மதிய உணவுடன் முட்டை வழங்கப்பட்டு வருகிறது. இதைத் தொடர்ந்து பல மாநிலங்களும் அரசு ஊட்டச்சத்திற்காக பள்ளி மாணவர்களுக்கு முட்டை வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியது.

அந்த வகையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த 2023 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவுடன் முட்டை வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அதாவது, மாணவர்களுக்கு வாரம் ஒரு முட்டை வழங்கப்பட்டு வந்தது. அதே சமயம் முட்டை சாப்பிடாத மாணவர்களுக்கு வாழைப்பழம் வழங்கப்பட்டு வந்தது.

இதற்காக மாநில அரசு ஒரு வருடத்திற்கு ரூ.50 கோடி செலவு செய்கிறது. அரசின் இந்த திட்டத்திற்கு வலதுசாரி அமைப்புகள் கடும் எதிர்ப்புகளை தெரிவித்ததையடுத்து, 40% பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் பள்ளிகளுக்கு முட்டை வழங்கப்படாது என்று அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், அரசுப் பள்ளிகளுக்கான மதிய உணவுடன் முட்டை மற்றும் சர்க்கரை வழங்குவதற்கான நிதியை நிறுத்துவதாக மகாராஷ்டிரா மாநில அரசு அறிவித்துள்ளது.
இந்த மாநிலத்திற்கு முன்னதாக மத்தியப்பிரதேசம், கோவா மாநிலங்களில் முட்டை வழங்கும் திட்டம் கைவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

school egg fund cancelled in maharastra government


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->