பரோட்டாவால் பறிபோன பள்ளி மாணவியின் உயிர்.. சோகத்தில் குடும்பத்தினர்.! - Seithipunal
Seithipunal


கேரளாவில் 11ஆம் வகுப்பு மாணவி பரோட்டா சாப்பிட்டதால் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கேரளா மாநிலம் வாழத்தோப்பு பகுதியில் வசித்து வருபவர் சிஜூ. இவருக்கு நயன் மரியா என்ற 16 வயது மகள் உள்ளார். இவர் அருகிலுள்ள செயின்ட் ஜார்ஜ் மேல்நிலைப் பள்ளியில் பதினோராம் வகுப்பு படித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இரவில் அருகில் உள்ள கடையில் புரோட்டா வாங்கி சாப்பிட்டுள்ளார். இதனை அடுத்து இவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து உடனடியாக பெற்றோர் இடுக்கி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த மாணவி சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். பரோட்டா சாப்பிட்டால் மாணவி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

School girl death ate parotta in kerala


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->