முடி வெட்டியது சரி இல்லை.. மன உளைச்சலில் சிறுவன் எடுத்த விபரீத முடிவு.!
school student sucide for upset over haircut in mumbai
முடி வெட்டியது சரி இல்லை.. மன உளைச்சலில் சிறுவன் எடுத்த விபரீத முடிவு.!
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை நகரில் பாந்தர் பகுதியை சேர்ந்தவர் சிறுவன் சத்ருகன் பதக். இவர் அதே பகுதியில் உள்ள பள்ளியில் எட்டாம் ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
இவர் கடந்த நான்காம் தேதி தனது உறவுக்கார இளைஞருடன் முடி திருத்தம் செய்வதற்காக கடைக்குச் சென்று இருந்தார். கடைக்காரனிடம் தனக்கு ஸ்டைலாக முடித்த திருத்தம் செய்யும் படி தெரிவித்துள்ளார். ஆனால், சிறுவன் எதிர்பார்த்தபடி முடி வெட்டாமல், சிறியதாக வெட்டியுள்ளார்.
இதனால் வருத்தம் அடைந்த சிறுவன் வீட்டிற்கு வந்தும், தனது தலைமுடி சிறியதாக இருப்பதை பார்த்து மன உளைச்சலுக்கு ஆளானார். இதைக்கவனித்த அவரது பெற்றோர் அவரை சமாதானப்படுத்த முயன்ற போதும் அந்த சிறுவன் சமாதானம் ஆகவில்லை.
இந்த நிலையில் சிறுவன் வீட்டில் உள்ள அனைவரும் தூங்க சென்ற பிறகு தனது வீட்டின் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சத்தம் கேட்டு ஓடி போய் பார்த்த வாட்ச் மேன் உடனே சிறுவனின் வீட்டிற்கு தகவல் கொடுத்துள்ளார்.
இதைக்கேட்டு பதறிப்போய் ஓடி வந்த சிறுவனின் பெற்றோர்கள் சிறுவனை மருத்துவனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் சிறுவன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
school student sucide for upset over haircut in mumbai