தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: இதெல்லாம் முற்றிலும் வதந்தி...  - செல்வப்பெருந்தகை பரபரப்பு பேட்டி - Seithipunal
Seithipunal


அகில இந்திய காங்கிரஸ், கடந்த 17ஆம் தேதி தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக கு. செல்வப்பெருந்தகையை நியமித்தது.

அவருக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்தனர். மேலும் சட்டப்பேரவை காங்கிரஸ் குழு தலைவராக எஸ். ராஜேஷ் குமார் நியமிக்கப்பட்டுள்ளார். 

இந்நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வ பெருந்தகை, இன்று டெல்லியில் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை சந்தித்து பேசினார். 

இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த செல்வ பெருந்தகை, தி.மு.கவுடன் தொகுதி பங்கீடு விரைவில் கையெழுத்தாகும். 

தி.மு.க-காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை இழுபறி என்ற தகவல் வதந்தி. காங்கிரஸ் தலைமையுடன் இரண்டாவது ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. அதன் பிறகு அதிகாரபூர்வ தகவல் வெளியாகும் என தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Selvaperundhai speech goes viral


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->