மும்பை விமான நிலையத்தில் 16.36 கிலோ தங்கம் பறிமுதல்.! - Seithipunal
Seithipunal


மும்பை விமான நிலையத்தில் 16.36 கிலோ தங்கம் பறிமுதல்.!

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை விமான நிலையத்தில் ஐக்கிய அமீரகத்தில் இருந்து வருபவர்கள் அதிகளவில் தங்கம் கடத்தி வருவதாக விமான நிலைய வருவாய் புலனாய்வு இயக்குனரக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. 

அந்த தகவலின் படி அதிகாரிகள் ஐக்கிய அமீரகத்தில் இருந்து மும்பைக்கு வந்த  பயணிகளிடம் அதிரடி சோதனை நடத்தி சுமார் 16.36 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்தனர். இதேபோன்று சில தங்க கட்டிகள் மற்றும் நகைகளையும் கைப்பற்றினர். இவற்றின் மொத்த மதிப்பு ரூ.10 கோடியே 16 லட்சம் ஆகும். 

அதன் பின்னர் போலீசார் மேலும் அவர்களிடம் விசாரணை நடத்தி தங்க கடத்தல் தொடர்புடைய இடத்தில் சோதனை மேற்கொண்டனர். அங்கு ரூ.85 லட்சம் மதிப்பிலான 1.42 கிலோ தங்கம், ரூ.16 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு பணம் மற்றும் ரூ.88 லட்சம் இந்திய பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 

மேலும் போலீசார் இந்த கடத்தல் சம்பவத்தில் தொடர்புடைய மும்பை கிரான்ட் ரோடு பகுதியை சேர்ந்த பெண் சுகைல் புனாவாலாவையும் கைது செய்தனர். 
பின்னர் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

sixteen kg gold seized in mumbai airport


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->