மும்பை விமான நிலையத்தில் 3 கிலோ தங்கம் பறிமுதல்.! - Seithipunal
Seithipunal


மும்பை விமான நிலையத்தில் 3 கிலோ தங்கம் பறிமுதல்.!

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை சர்வதேச விமான நிலையத்தில் நேற்று முன்தினம் இரவு சார்ஜாவில் இருந்து விமானம் ஒன்று வந்தது. இந்த விமானத்திலிருந்து இறங்கிய பயணிகளிடம் சுங்கவரித்துறையினர் வழக்கமான சோதனையில் ஈடுபட்டனர். 

அப்போது பயணி ஒருவர் தனது பெல்ட்டில் தங்கதுகள்களை மறைத்து கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதை கவனித்த போலீசார் உடனே அதனை பறிமுதல் செய்ததில், 1 கிலோ 79 கிராம் எடையுள்ள தங்கதுகள்கள் இருந்தது தெரியவந்தது. 

இதையடுத்து, போலீசார் அந்தப் பயணியை கைது செய்தனர். இதேபோன்று மற்றொரு பயணி கொண்டு வந்த மிக்சி, கிரைண்டர் உள்ளிட்ட எந்திரத்தில் அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அதில், அந்த எந்திரங்களுக்குள் 1 கிலோ 38 கிராம் எடையுள்ள தங்ககட்டிகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை, போலீசார் பறிமுதல் செய்து தங்கத்தை கடத்தி வந்த பயணியை கைது செய்தனர். 

அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், தங்கம் கடத்தி வந்த இரண்டு பேரும் இந்திய நாட்டை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. இதனால், மும்பை விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

three kg gold seized in mumbai airport


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->