மின்னல் தாக்கி விவசாயி ஒருவர் உயிரிழப்பு.! - Seithipunal
Seithipunal


தார்வார் மாவட்டம் குந்துகோல் தாலுகா ஹாலகுசுகல்லா கிராமத்தை சேர்ந்தவர் விரோபக்சப்பா (வயது 47). விவசாயி. தனது நண்பரான உசைன்சாப் என்பவருடன் சேர்ந்து அந்த பகுதியில் உள்ள விளை நிலங்களுக்கு பூச்சி கொல்லி மருந்து அடிப்பதற்காக சென்றார். 

அவர்கள் 2 பேரும் விளைநிலத்தில் வேலை செய்து கொண்டிருந்தபோது திடீரென கனமழை பெய்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரும் அந்த பகுதியில் உள்ள மரத்தின் அடியில் நின்று கொண்டிருந்தனர். 

அப்போது திடீரென மின்னல் அவர்கள் நின்ற மரம் மீது விழுந்தது. இதில் மின்னல் தாக்கி விரோபக்சப்பா சம்பவ இடத்திலேயே உடல் கருகி பலியானார். இதுகுறித்து குந்துகோல் புறநகர் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

 அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். மேலும், இறந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Thunder storm strike former death


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->