கேரளாவில் சோகம்!...கூகுள் மேப்பால் மூச்சுத்திணறி இரண்டு பேர் பலி! - Seithipunal
Seithipunal


கேரளாவில் கூகுள் மேப்பை பார்த்து காரை இயக்கியதில், இரண்டு பேர் ஆற்றில் கவிழ்ந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலத்தில் உள்ள கோட்டயம் மாவட்டம் அருகே, கூகுள் மேப் மூலம் இரண்டு பேர் காரில் சென்று கொண்டிருந்துள்ளனர். தொடர்ந்து கூகுள் மேப்பை பார்த்து காரை இயக்கியதாக கூறப்படும் நிலையில், கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையில் அருகே இருந்த ஆற்றில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.

இந்த விபத்தில் காரில் பயணம் செய்த இரண்டு பேரும், மூச்சு திணறி  சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், பொதுமக்கள் உதவியுடன் உயிரிழந்தவர்க்ளின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் உயிரிழந்த இருவரும் மகாராஷ்டிரா மாநிலம், தானே பகுதியை சேர்ந்தவர்கள் என்று தகவல் வெளியாகி உள்ள நிலையில், தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து  போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Tragedy in kerala two people died of suffocation due to google maps


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->