மும்பை விமான நிலையத்தில் போர்டிங் பாஸை மாற்றிய இலங்கை பயணி கைது.! - Seithipunal
Seithipunal


மும்பை விமான நிலையத்தில் போர்டிங் பாஸை மாற்றிய இலங்கை பயணி கைது.!

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை சர்வதேச விமான நிலையத்தில் இலங்கை பயணி ஒருவர் இங்கிலாந்து நாட்டிற்கு செல்வதற்காக போர்டிங் பாஸ் பெற்றுள்ளார். இந்த போர்டிங் பாஸ்சை சரிபார்த்த விமான நிலைய அதிகாரி கடவுச் சீட்டில் உள்ள முத்திரை எண்ணும், போர்டிங் பாஸ்சில் இருந்த முத்திரை எண்ணும் மாறி இருந்தது.

இதைப்பார்த்த விமான நிலைய அதிகாரி இங்கிலாந்து விமான நிலைய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பின்னர் போலீசார் அந்த நபரைக் கைது செய்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், அந்த நபர் கடந்த ஒன்பதாம் தேதி மும்பை விமான நிலையம் அருகே உள்ள ஒரு ஓட்டலில் அரை எடுத்து தங்கி இருந்துள்ளார்.

அந்த நேரத்தில் அதே ஓட்டலில் தங்கி இருந்த ஜெர்மன் நாட்டு பயணியுடன் அவருக்கு அறிமுகம் கிடைத்தது. இதில் இலங்கை பயணி காட்மண்டுவிற்கும், ஜெர்மன் நாட்டு பயணி இங்கிலாந்து நாட்டிற்கும் செல்ல இருந்துள்ளனர். இதையடுத்து, இருவரும் தங்களின் போர்டிங் பாசை மாற்றி கொண்டு வெவ்வேறு நாட்டிற்கு செல்ல முடிவு செய்தனர். 

அதன்படி அவர்கள் இருவரும் விமான நிலையத்தில் போர்டிங் பாஸ் பெற்றவுடன் அங்குள்ள கழிவறையில் தங்களின் பாஸ்சை மாற்றி கொண்டது தெரியவந்தது. அவர் அளித்த தகவலின் படி காட்மண்ட் செல்ல இருந்த ஜெர்மன் நாட்டு பயணியையும் போலீசார் கைது செய்தனர். 

இதைத்தொடர்ந்து போலீசார் பிடிபட்ட இரண்டு பேர் மீதும் மோசடி மற்றும் கிரிமினல் சதி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து இருவரிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகி்ன்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

two peoples arrested for change bording pass


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->