2 பெண்களின் உயிரை பறித்த தண்ணீர் தொட்டி - உ.பியில் சோகம்.!
two womens died in uttar pradesh for ater tank collapse
உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் உள்ள மதுராவில் நேற்று இரவு திடீரென மேல்நிலைத் தண்ணீர் தொட்டி இடிந்து விழுந்து 2 பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 13 பேர் காயமடைந்துள்ளனர்.
இந்தச் சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளித்ததில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே தண்ணீர் தொட்டி உடைந்து பல வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. இதனால் மின் சாதனங்கள் பெருமளவு சேதமடைந்துள்ளன. சாலையில் நிறுத்தப்பட்டிருந்த கார்களும் தண்ணீர் தொட்டி இடிந்து விழுந்ததால் சேதமடைந்தன.
தற்போது அந்தப் பகுதியில் காவல்துறை, என்டிஆர்எஃப் மற்றும் அவசர சேவைகள் பிரிவு ஊழியர்கள், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். இந்தச் சம்பவத்தால் அப்பகுதி முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.
English Summary
two womens died in uttar pradesh for ater tank collapse