திடீர் திருப்பம்! ஹத்ராஸ் விவகாரத்தில் முக்கிய புள்ளி கைது! அதிரடி காட்டிய உ.பி போலீஸ்! - Seithipunal
Seithipunal


உத்தரபிரேதேசம் : ஹத்ராஸ் விவகாரத்தில் முக்கிய குற்றவாளியை உத்தரபிரதேசம் போலீசார் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

உத்திரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் அருகே புல் ட்ராய் கிராமத்தில் கடந்த 2ம் தேதி சாமியார் போலே பாபாவின் ஆன்மீக சொற்பொழிவு நடந்தது. அந்த நிகழ்ச்சி கூட்ட நெரிசலில் சிக்கி 121 பேர் பலியான சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக போலீசார் சட்டத்தின் கீழ் மரணம் விளைவித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். நிகழ்ச்சி ஏற்பாடு செய்த 2 பெண் உட்பட 6 பேர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டனர்.

இதுநிலையில் தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளி தேவபிரகாஷ் பற்றி துப்பு கொடுப்பதற்கு ரூ.1 லட்சம் பரிசு வழங்குவதாக உத்திரபிரதேசம் போலீசார் அறிவித்தனர். இந்த நிலையில் தலைமறைவாக இருந்து வந்த தேவபிரகாஷ்  டெல்லியின் உத்தம் நகரின் நஜப்கார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக உத்தரப் பிரதேசம் போலீசருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

தகவலின் அடிப்படையில் நள்ளிரவு அங்கு சென்ற போலீசார் தேவபிரகாசை கைது செய்து உத்திரபிரதேசம் அழைத்து  வந்து விசாரணை நடத்தி வருகின்றதாக தகவல் வெளியாகி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Uttar Pradesh Police has arrested the main culprit in the Hadhras case


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->