தொடங்கிய முதற்கட்ட வாக்குப்பதிவு: ராணுவ படையினர் தீவிர பாதுகாப்பு!
Voting first phase started military strict security
கடந்த மாதம் 16ஆம் தேதி, மக்களவை தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் ஜூன் 1ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.
அந்த வகையில் இன்று தமிழகம், புதுச்சேரியில் முதற்கட்ட வாக்கு பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு அருணாச்சல பிரதேசம், அசாம், சத்தீஷ்கர், ராஜஸ்தான், உத்தரகாண்ட், மேற்கு வங்கம், புதுச்சேரி உள்பட 21 மாநிலங்கள் 102 தொகுதிகளில் இன்று வாக்கு பதிவு தொடங்கியுள்ளது.
வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது. ஆனால் அருணாச்சல பிரதேசம் போன்ற சில மாநிலங்களில் 5 மணிக்கு வாக்கு பதிவு முடிக்கப்பட உள்ளது.
மக்களவைத் தேர்தலுடன் சட்டசபை வாக்குப்பதிவு அருணாச்சல பிரதேசம், சிக்கிம் மாநிலங்களில் தொடங்கியுள்ளது.
இதனால் அமாநிலங்களில் போலீசார் உடன் இணைந்து துணை ராணுவ படையினரும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
English Summary
Voting first phase started military strict security