மேற்கு வங்க ரயில் விபத்து: உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு நிவாரணம் அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


மேற்கு வங்கம், டார்ஜிலிங் மாவட்டத்தில் நியூ ஜல்பைகுரி அருகே கஞ்சன்ஜங்கா விரைவு ரயில் மீது பின்னால் வந்த சரக்கு ரயில் மோதி இன்று விபத்துக்குள்ளானது. 

இந்த விபத்தில் ரயில் பெட்டிகள் தடம் புரண்டதால் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்து விட்டனர். மேலும் 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில் மீட்க பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இது குறித்து அறிந்த மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இது குறித்து மத்திய ரயில்வே துறை அமைச்சர் வெளியிட்டுள்ள வலைதளப் பகுதியில், 

மேற்கு வங்க ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ. 10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும். படுகாயம் அடைந்தவர்களது குடும்பத்துக்கு ரூ. 2 லட்சத்து 50 ஆயிரம் லேசான காயமடைந்தவர்களுக்கு ரூ. 50000 நிவாரணமாக வழங்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

West Bengal train accident Relief announced


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->