மீண்டும் ஆம் ஆத்மி ஆட்சியை பிடிக்குமா ? தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு வெளியீடு! - Seithipunal
Seithipunal


டெல்லியில் ஆட்சியை பிடிப்பது யார் என்று தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் வெளியாகி உள்ளன.இதில் பெரும்பாலும் பாரதிய ஜனதாவுக்கு சாதகமாக முடிவுகள் வெளியாகியுள்ளதால், ஆட்சி மாற வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.

70 தொகுதிகளைக் கொண்ட டெல்லி சட்டசபையின் தற்போதைய பதவிக்காலம் வருகிற 23-ந்தேதியுடன் நிறைவு பெறுகிறது. இதனை முன்னிட்டு கடந்த மாதம் தேர்தல் அறிவிக்கப்பட்டு  இன்று தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலையில் 7 மணிக்கு தொடங்கியது.விறுவிறுப்பாக தொடங்கியிருந்த நிலையில், மக்கள் ஆர்வமாக சென்று தங்களுடைய வாக்குகளை பதிவு செய்தனர். இதனையடுத்து, மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு அமைதியாக நடந்து முடிந்தது. டெல்லி சட்டசபைத் தேர்தலில் பதிவான வாக்குகள் பிப்.8ல் எண்ணப்படுகின்றன.இந்த தேர்தலில்  டெல்லி சட்டசபைத்தேர்தலில் ஆளும் ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் என மும்முனை போட்டி நிலவுகிறது. டெல்லி சட்டசபை தேர்தலில் மாலை 5 மணி நிலவரப்படி, 57.78 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்தநிலையில் டெல்லியில் ஆட்சியை பிடிப்பது யார் என்று தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் வெளியாகி உள்ளன.இதில் பெரும்பாலும் பாரதிய ஜனதாவுக்கு சாதகமாக முடிவுகள் வெளியாகியுள்ளதால், ஆட்சி மாற வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.டெல்லியில் பாஜகதான் ஆட்சியை கைப்பற்றும் என்று பெரும்பான்மையான கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன.

என்.டி.டி.வி செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள கருத்து கணிப்பில்,

பாஜக 51-60,ஆம் ஆத்மி 10-19,காங்கிரஸ் 0,சி.என்.என் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது,

இதேபோல ,பாஜக 40.ஆம் ஆத்மி 30.காங்கிரஸ் 0. என டைம்ஸ் நவ் வெளியிட்டுள்ள கருத்து கணிப்பில் தெரிகிறது,

அதனை தொடர்ந்து பாஜக 37 - 43,ஆம் ஆத்மி 32-37,காங்கிரஸ் 0 -2 இடங்கள்,ரிபப்ளிக் டிவி வெளியிட்டுள்ள கருத்து கணிப்பில் தகவல் வெளியாகியுள்ளது,

மேலும் பாஜக 35-40,ஆம் ஆத்மி 32-37,காங்கிரஸ் 0-1 இடங்கள்,போல் டைரி வெளியிட்டுள்ள கருத்து கணிப்பில் கூறப்பட்டுள்ளது,

இதேபோல பாஜக 42-50,ஆம் ஆத்மி 18 -25,காங்கிரஸ் 0-2.பிற கட்சிகள் 1 இடங்கள்,டைம்ஸ் வெளியிட்டுள்ள கருத்து கணிப்பில் தெரிகிறது ,

மேலும் பாஜக -51 -60,ஆம் ஆத்மி 10-19,பீப்பிள் பல்ஸ் வெளியிட்டுள்ள கருத்து கணிப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது .

இதேபோல பாஜக 51-60,ஆம் ஆத்மி 10 - 19,காங்கிரஸ் 0,சாணக்யா வெளியிட்டுள்ள கருத்து கணிப்பில்தெரிவித்துள்ளது,


மேலும் பாஜக 39 -45,ஆம் ஆத்மி 22-31,காங்கிரஸ் 0-2 இடங்கள்,பி-மார்க் தெரிவித்துள்ளது .


தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் ஆம் ஆத்மி, காங்கிரஸ் கட்சிகளுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Will AAP come back to power? Exit poll release!


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->