ஆழ்துளை கிணற்றில் விழுந்த இளம்பெண் - நீண்ட போராட்டத்திற்கு பிறகு பிணமாக மீட்பு.! - Seithipunal
Seithipunal


குஜராத் மாநிலத்தில் உள்ள கட்ச் மாவட்டம் பூஜ் தாலுகா கண்டேராய் கிராமத்தில் 18 வயது இளம்பெண் நேற்று காலை ஆழ்துளை கிணற்றில் விழுந்துள்ளார். இந்தச் சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த மீட்புப் படையினர் இளம்பெண்ணை மிடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்தனர்.

540 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் 490 அடி ஆழத்தில் சிக்கிய இளம்பெண் மயக்கத்தில் இருப்பதால் அவருக்கு தேவையான ஆக்சிஜன் வழங்கப்பட்டது. இருப்பினும், சிக்கியுள்ள பெண்ணை மீட்க தேசிய பேரிடர் மீட்புப் படை மற்றும் எல்லைப் பாதுகாப்புப் படை குழுக்களும் அழைக்கப்பட்டன.

இந்த நிலையில், மீட்புக் குழுவினர் சுமார் 33 மணி நேர போராட்டத்துக்கு பிறகு இளம்பெண்ணை மீட்டனர். உடனடியாக இளம்பெண் அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் இளம்பெண் உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனர்.

ஆழ்துளை கிணற்றில் விழுந்த இளம்பெண் 33 மணி நேர போராட்டத்துக்கு பிறகு உயிரிழந்தது அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

women died for drowned bore well in gujarat


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->